திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர உத்தியோகத்தரான ஜே.எஸ்.அருள்ராஜ் தமது கடமைகளை இன்று மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியான இவர் 2003 ம்ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டார்.
கிண்ணியா,சேருவல பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும் முன்னர் இருந்த வடகிழக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றிலும் கடமையாற்றியுள்ளார்.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் , கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையை பதவியேற்க முன்னர் இவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

0 comments :
Post a Comment