அல் நஜா விளையாட்டுக் கழகத்தின் சாதனை வீரர்கள் கௌரவிப்பு விழா







பைஷல் இஸ்மாயில் -

ட்டாளைச்சேனை அல் நஜா விளையாட்டுக் கழகத்தின் சாதனை வீரர்கள் கௌரவிப்பு விழாவும், கழகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் நேற்று (11) அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆர்.டி.டிஸ். கட்டடத்தில் இடம்பெற்றது.

விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருமாகிய எஸ்.எம்.எம்.முஷhரப் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரின் வெளிமாவட்ட இணைப்பாளர் வை.எல்.எம்.நியாஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.கே.அமீர், கோணாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாயல் தலைவர் எஸ்.எம்.அமீன், கவிஞர் ஈழமதி ஜப்பார், கழகத்தின் சிரேஷ;ட ஆலோசகரும் ஆசிரியருமான எம்.ஐ.ஹாபீழ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த கழகத்தின் வீரர்களான ஏ.எம்.றிஸ்வான் மற்றும் ஏ.ஆர்.நிக்காஸ் ஆகியோர்களுக்கும் கழகத்தின் பெயர் சூட்டிய ஆரம்பகால உறுப்பினர் ஏ.பி.அன்சார், கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் ஆகியோர்களை பிரதம அதிதி பொன்னாடை போர்த்தி ஞாபகச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளருமாகிய எஸ்.எம்.எம்.முஷhரபின் மக்கள் பணி சேவைகளுக்கான பாராட்டுடன் பொன்னாடை மற்றும் ஞாபகச் சின்னத்தை கழகத்தின் தலைவரினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :