பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 2021 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கான ஆலோசனையும் வழிகாட்டலும்



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிக்குடி அதிபர். திரு.எம்.சபேஸ்குமார் அவர்களின் ஆலோசனையின் பேரில் 2021 ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்திருக்கும் மாணவர்கள் , எதிர்காலத்தில் க.பொ.த . உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் போது தங்களுக்குரிய பாடத் தெரிவுகளை தேர்ந்தெடுத்தல் சம்பந்தமான ஆலோசனையும் வழிகாட்டலும் இன்று ( 7 ) கல்லூரி ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி ஆசிரியர்களான திரு. எஸ்.பி.சுதர்சன் , திரு.வீ.அருணாகரன் , திரு.எஸ்.கவியரசன் , திரு.ரீ.கோகுல்ராஜ் ஆகியோர் இந.நிகழ்வில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இப்பாடசாலையின் எதிர்காலஉயர்தர பரீட்சை முடிவுகள் சிறப்பாக அமைவதுடன் , அதிகளவிலான மாணவர்கள் பல்துறையிலும் பல்கலைக் கழக அனுமதி பெறும் வீதத்தை அதிகரிக்கச் செய்வதுடன் , நாட்டுக்கும் , சமூகத்திற்கும் , பிரதேசத்திற்கும் ஏற்ற ஒழுக்கமுள்ள நற்பிரஜைகளையும் உருவாக்குவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :