வயலுக்குள் கால்நடைகள் அத்துமீறிநுழைந்தால் 2000ருபா தண்டம்! திருக்கோவில் விவசாயக்கூட்டத்தில் தீர்மானம்.



வி.ரி.சகாதேவராஜா-
கால்நடை அத்துமீறி வயல் நிலங்களுக்குள் நுழைந்தால் தண்ட பணமாக ஒரு கால் நடைக்கு 2000/- ருபாய் தண்டப்பணமாக வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள மொத்த 1890 ஏக்கர் விவசாய உற்பத்தியாளருக்கான சிறுபோக ஆரம்ப கட்டப் பொதுக்கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அங்கு மேலும் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன
தீர்மானங்கள்.

பாய்ச்சல் நில நீர் வினியோகம் 2021.03 27 வயல் நெல் விதைப்பு திகதி2021.03.31 தொடக்கம் 2021.04.12வரை
இறுதி பாய்ச்சல் நீர் விநியோகம் 2021.7.15வரை
வயல் அறுவடை ஆரம்பம்,திகதி 2021.8.01.தொடக்கம் 2021.08.15
விதைக்கப்பட வேண்டிய நெல் இனம் 3அரை மாதம்நெல் தொகுதி
காப்புறுதி கட்டும் திகதி 2021.4.20
கால்நடை மேய்ச்சல் தடைபடும் காலப்பகுதி 2021.03.21 தொடர்கம் 9.2021.08.20வரையான கால்நடைகள் அப்பகுதி மேய்ச்சலில் இருந்து தடைபடுகின்றது.
அறுவடை செய்யும் இயந்திரங்களின் கூலி டயர் 4000 பட்டி 6000
உழவு இயந்திர உழவுக்கூலி 6000/-ரூபாய்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :