கல்முனை வலயக் கல்வி அதிபர்களுக்கான செயலமர்வு



சர்ஜுன் லாபீர்-
ல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கான நிதி முகாமைத்துவம், வருட இறுதி வரவு செலவுத் திட்ட அறிக்கை தயாரித்தல் சம்மந்தமாக தெளிவூட்டும் செயலமர்வு இன்று(31)கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் கல்விப் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு வளவாளராக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் வை.ஹபிபுல்லா கலந்து கொண்டு விளக்கவுரை வழங்கினார்.

இன்றைய நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் சாய்ந்தமருது,காரைதீவு,நிந்தவூர் ஆகிய கோட்ட மட்டத்தில் உள்ள பாடசாலைகளை மையப்படுத்திய அதிபர்கள் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர் என கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :