தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவான காலத்தில் நிரந்தர விரிவுரையாளராக மொழித்துறையில் இணைந்து கொண்ட ராஹிலா ஷியாத் அண்மையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமது கலாநிதிப் பட்டப் படிப்பை பூர்த்தி செய்து பட்டம் பெற்றுள்ளார்.
புத்தளம் நகரில் மஹுமூத் லெப்பைக்கும் மஹுபூபாவுக்கும் மகவாக பிறந்த இவர், அங்கேயே தமது பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார். அங்கு தமிழில் சிறப்புப் பட்டம் பெற்று, முதுதத்துவமானிப் பட்டத்தினையும் பெற்றுக் கொண்டார். பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் அகராதி பற்றிய ஆராய்ச்சியினை மேற்கொண்டு கலாநிதிப் பட்டத்தினையும் கடந்த 24, 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பெற்றுக் கொண்டார்.
முஸ்லிம் பெண்கள் பல்கலைக்கழகத்தில் தமது பட்டப் படிப்போடு மாத்திரம் நின்றுவிடாமல் உயர் பட்டக் கல்வியை மேற்கொண்டும் சாதனை படைக்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் ராஹிலா ஷியாத்துக்கு என்றும் எமது வாழ்த்துக்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment