அக்கரைப்பற்று சன்றைஸ் கழகம் கரம் போட்டியில் சோடி மற்றும் தனிப்பிரிவுகளில் வென்று மாவட்ட போட்டிக்கு தகுதி!

நூருல் ஹுதா உமர்-

ளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் 33 வது இளைஞர் விளையாட்டு போட்டியினை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டி அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம். ஸமீலுல் இலாஹி தலைமையில் அக்கரைப்பற்று கரம் நிலையத்தில் இன்று 28ம் திகதி நடைபெற்றது.

கழகங்களுக்கிடையிலான இறுதி சுற்றுப்போட்டியில் சன்றைஸ் இளைஞர் கழகமும் ஹிஜ்ரா இளைஞர் கழகமும் தனி மற்றும் இரட்டையர் போட்டிகளில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் முதலாம் இடத்தினை இரு பிரிவுகளிலும் சன்றைஸ் இளைஞர் கழகம் பெற்றதுடன் மாவட்ட மட்ட இளைஞர் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற புள்ளிவிபரத்திணைக்கள உத்தியோகத்தரும் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினருமான ஐ. எல். சரிப்டீன், அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் எம்.எம். றுக்சான் மற்றும் முக்கியஸ்தர்கள், இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :