பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய வித்தியாரம்ப விழா



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
புதிய ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் வித்தியாரம்ப விழா கடந்த திங்கட்கிழமை பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிக்குடி யில் மிகவும் விமரிசையாக இடம்பெற்றது.
ஆரம்ப பிரிவு பகுதித் தலைவர் திரு. எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரி முதல்வர் திரு.எம்.சபேஸ்குமார் பிரதம அதிதியாகவும் , பிரதி அதிபர் ரீ.ஜனேந்திரராசா , உதவி அதிபர்களான திரு.எம்.ரவிச்சந்திரன் , ஏ.கலாபராஜன், வீ.ரவீந்திரமூர்த்திஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் , வகுப்பாசிரியர்களான திருமதி.கீ.ராகவன் , திருமதி.வீ.விமலசேன , திருமதி.எஸ்.டர்சியானா , திருமதி. செள.தர்மேந்திரா ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
புதிய மாணவர்கள் சிரேஸ்ட மாணவர்களால் இனிப்புகள் வழங்கி வரவேற்கப்பட்டதுடன் அதிதிகளும் மாணவர்களால் மாலை சூடி புதிய வகுப்பறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிகழ்வில் முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :