சில காவல்துறை அதிகாரிகள் மக்கள்மீது நடாத்தும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றேன்-முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்



னித உரிமை மீறல் மற்றும் துன்புறுத்தல்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரண விடயமாக மாறி வருகின்றது மனிதர்களிடையே மனிதாபிமானமும் குறைந்து கொண்டு செல்கின்றது அண்மையில் போக்குவரத்து பிரிவு காவல்துறை அதிகாரி ஒருவர் மக்கள் கூடி நிற்கும் பகுதியிலே ஒரு நாட்டிற்கு வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் நடந்துகொள்ள வேண்டிய அரச அதிகாரி சாதாரண ஒரு பொது மகனை தாக்கியது நான் வன்மையாக கண்டிக்கின்றேன்

எவ்வாறு ஒரு பொதுமகன் சட்டத்தை தன கையில் எடுக்க கூடாதோ அதே போல அரச அதிகாரிகளும் சட்டத்தை தன கையில் எடுத்து நடக்கக்கூடாது அதற்காகவே பல நீதிமன்றங்கள் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் உள்ளார்கள்

இந்த ஒரு செயலுக்காக முழு காவல் துறையினரையும் நாங்கள் தவறாக கூற முடியாது அதிகமான இடங்களில்நாண்கள் பார்த்திருக்கின்றோம் பல காவல்துறை அதிகாரிகள் இரவு பகல் பாராமல் மக்களுக்கு உண்மையான சேவைகளை தியாகங்களை செய்து வருகின்றார்கள் ஆனால் ஒருசில அதிகாரிகள் இவ்வாறான தவறுகளை செய்யும் பட்சத்தில் நாட்டின் சட்டம் கேள்விக்குறியாகவும் பாரிய பின்விளைவுகளையும் கொண்டுவருகின்றது

எனவே நாங்கள் காவல்துறை மட்டும் குறை கூறுவதை நிறுத்திவிட்டு பொதுமக்கள் நீங்களும் சட்டத்தை மதித்து அவர்களுக்கான கண்ணியத்தை கொடுங்கள் வீதி விபத்து என்பது இன்று சாதாரண ஒன்றாக மாறி இருக்கின்றது இதை எவ்வாறு கட்டுப்படுத்துவதென்று காவல்துறை பாரிய திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது ஆனால் பொதுமக்கள் நீங்கள் இதற்கு முயட்சி செய்யாமல் விபத்துக்களை தடுக்க முடியாது எவ்வாறு ஒரு காவல்துறை அதிகாரி தாக்கியது தவறோ அதேபோல நாமும் வீதிகளில் வீதி ஒழுங்குகளை மீறி நடப்பது தவறு

எனவே நாமும் சத்தத்தோடு இணைந்து கட்டுப்பட்டு நடக்கவேண்டும் அதேபோல காவல்துறை அதிகாரிகளும் இவ்வாறான மனித உரிமை மீறல் தாக்குதல்களை நடத்தாமல் இருக்க வேண்டும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :