இன்று முதல் வடக்கு கிழக்கில் கவனஈர்ப்புப்போராட்டம்



வி.ரி.சகாதேவராஜா-
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில்இன்று (17) முதல் வடக்கு கிழக்கில் கவனஈர்ப்புப்போராட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும் முகமாக இது நடைபெறவிருக்கிறது.
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவிலிருந்து ,d;W 17ம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கும்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து பங்குனி 19ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

கீழ்வரும் பிரதான கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியே இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

1. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும்.

2. தமிழர்களுடைய மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமை போன்ற தமிழ் மக்களின் நீண்டகால அடிப்படை உரிமைக் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் நீதி மற்றும் உரிமைகளுக்கான இப் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்குமாறு மதத்தலைவர்கள், தமிழ்த்தேசிய கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரிடமும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) மக்கள் பேரெழுச்சி இயக்கம் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :