கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஒரே இலக்கத்தை பாவிக்கும் வசதி விரைவில்!



J.f.காமிலா பேகம்-
தொலைபேசி இலக்கத்தை மாற்றம் செய்யாமல் தொலைதொடர்பு சேவை வழங்குனரை மாற்றுவதற்கான வாய்ப்பை பாவனையாளர்களுக்கு வழங்கும் திட்டத்தை இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் செயற்படுத்த, தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பாவனையாளர்களின் தேவையின் அடிப்படையில் தொலைபேசியில் பயன்படுத்தும் சிம் அட்டையை மாற்றம் செய்யாமல் தொலைதொடர்பு சேவை வழங்குனரை மாற்றம் செய்வதற்காக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :