தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு - 2021



வ்வாண்டுக்கான சர்வதேச மகளிர் தினம் உலகளாவிய ரீதியாக வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிகழ்வினை முன்னிட்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் சர்வதேச மகளிர் தின நிகழ்வினைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வினை பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமத்துவத்திற்கும் சமநிலைக்குமான நிலையம் ஏற்பாடு செய்துள்ளது. மேற்படி நிகழ்வு நாளை 16ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணிவரை நடைபெற இருப்பதாக பால்நிலை சமத்துவத்திற்கும் சமநிலைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி முஹம்மத் மஜீத் மஸ்றூபா அவர்கள் அறிவித்துள்ளார்.

இரு அமர்வுகளாக இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வில், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். இந்நிகழ்வின் சிறப்பு அதிதியாகவும் முதன்மைப் பேச்சாளராகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளரும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியுமான ஜனாப் ஏ.எல். அப்துல் அஸீஸ் பங்குபற்றவிருப்பதுடன் ”பெண்களை வலுவூட்டுதல் – பூகோளப் பார்வையும் தேசிய மேம்பாடும்” என்ற தலைப்பில் கருத்துரையும் வழங்கவுள்ளார்.

இந்நிகழ்வின் இரண்டாவது அமர்வாக ”பெண்களை வலுவூட்டுதல் – கருத்தாடலுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளியினை மனதில் கொள்ளுதல்” எனும் கருப்பொருளிலான சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெறவிருக்கின்றது. இந்நிகழ்வின் சிறப்பு அதிதி ஜனாப் ஏ.எல். அப்துல் அஸீஸ் அவர்களது தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையாடலில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் (பீடாதிபதி – அறபு மொழி, இஸ்லாமிய கற்கைகள் பீடம்), கலாநிதி எம்.ஐ. சபீனா (முன்னாள் பீடாதிபதி - பிரயோக விஞ்ஞானங்கள் பீடம்), கலாநிதி எம்.எம். பாஸில் (தலைவர் – அரசியல் விஞ்ஞானத் துறை), கலாநிதி எஸ். அனூசியா (தலைவர் – சமூக விஞ்ஞானங்கள் துறை) ஆகியோருடன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜனாப் எம்.சீ.எம். நவாஸ் பங்கேற்கவுள்ளார்.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக சமூகத்துடன் அம்பாரை மாவட்ட பிரதேச செயலக, கல்விக் காரியாலய, பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களும் அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளும் மகளிர் சங்கங்களினது உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஊடகப் பிரிவு
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :