கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020 க்கான க.பொ.த சா.தரப்பரீட்சை மார்ச் 1ஆம் திகதி முதல் நடைபெறவிருப்பதால் நாட்டிலுள்ள அரச பாடசாலைகளுக்கு நேற்று 25 ஆம் திகதி முதல் மார்ச் 14ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் மார்ச் மாதம் 15ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.அது சித்திரைவருடப்பிறப்பு விடுமுறைக்காக மீண்டும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி மூடப்படவிருக்கின்றது.
இதேவேளை பாடசாலை விடுமுறை காலத்தில் மிகவும் அவதானமாகவும் சிந்தனையுடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வார இறுதி விடுமுறை நாட்களில் சுற்றுலா வைபவங்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றுகூடல் போன்ற விடயங்களில் சுகாதாரப் பிரிவினர் வகுத்துள்ள சுகாதார பரிந்துரைகளுக்கமைய செயற்படுமாறும் தெரிவித்தார்.
பிரித்தானியாவின் புதிய கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
குறித்த க.பொ.த. சா.தரப்பரீட்சை எதிர்வரும் மார்ச் 1 ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நடைபெறவிருப்பது தெரிந்ததே.எனவே பரீட்சைக்காக பெப்.25 ஆம் திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்ட சகல பாடசாலைகளும் மீண்டும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.அது சித்திரைவருடப்பிறப்பு விடுமுறைக்காக மீண்டும் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி மூடப்படவிருக்கின்றது.
அவ்வாறு மூடப்படும் பாடசாலைகளில் தமிழ்சிங்களப் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக ஏப்ரல் 19ஆம் திகதி திறக்கப்படும் அதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் மே மாதம் 17 ஆம் திகதி திறக்கப்படும் என கல்வியமைச்சு சுற்றுநிருபம்மூலம் அறிவித்துள்ளது.
முஸ்லிம்களின் ரமழான் நோன்புக்காக ஏப்ரல் 10ஆம் திகதி முதல் மே 16 வரை விடுமுறை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment