மருதமுனை அந்-நஹ்ழா அரபுக்கல்லூரி ஏற்பாடு செய்த 73வது சுதந்திர தின நிகழ்வு.



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ருதமுனை அந்-நஹ்ழா அரபுக்கல்லூரி ஏற்பாடு செய்த 73வது சுதந்திர தின நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் ஏ. அபூஉபைதா (மதனி) தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது நாட்டில் நிலையான சுபீட்சம், சமாதானம் மற்றும் இனம்களுக்கிடையில் ஐக்கியம் வேண்டி விசேட துஆ பிராத்தனை நடைபெற்றதுடன் ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் இலக்கு' தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைய மரம் நடுகையும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்லூரியின் செயலாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான எப்.எம். அஹமது அன்சார் மௌலானா, பிரதிஅதிபர் ஏ.எச்.எம்.பர்ஸான் (காபிழ்) உட்பட விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலர் இதில் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :