இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத் தலைவர் வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை நாம் இன்று கொண்டாடுகின்றோம். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கும் துறைகளுள், சுற்றுலாத் துறையானது பல்வேறு பொருளாதார நோக்கங்களுக்கு உதவி வருகிறது. நாட்டிற்கான மூன்றாவது மிகப்பெரிய அந்நிய செலாவணி வருவாய் என்பதோடு மட்டுமல்லாமல், ஏராளமான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளும் சுற்றுலாத்துறையினால் உருவாக்கப்படுகின்றன.
இலங்கை அரசாங்கம் சுற்றுலா துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான உபாயங்களை கையாண்டு வருகின்றது.
கொவிட் தடுப்பு மருந்தினை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதனால், சுற்றுலாத்துறை இன்னும் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கொவிட் தொற்றுநோய் புதிய சவாலாக மாறி இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலக சுற்றுலாத் துறைக்கும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சவாலில் இருந்து மீளும் திட்டத்தை இலங்கை விரைந்து கையிலெடுக்கவேண்டும் என 73 ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத் தலைவர் ஏ.எம். ஜௌபர் தெரிவித்துள்ளா்.
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கொவிட் தொற்றுநோய் புதிய சவாலாக மாறி இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலக சுற்றுலாத் துறைக்கும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சவாலில் இருந்து மீளும் திட்டத்தை இலங்கை விரைந்து கையிலெடுக்கவேண்டும் என 73 ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் இலங்கை சுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றத் தலைவர் ஏ.எம். ஜௌபர் தெரிவித்துள்ளா்.

0 comments :
Post a Comment