பல்லின சமூகங்கள் வாழும் இலங்கைத் தீவில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட பொஹவன்தலாவ றாஹுல ஹிமி தேரர் நேற்றைய தினம்(17) கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேசத்திற்கு வருகை தந்து உலமாக்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இச்சந்திப்பில் சங்கைக்குரிய உலமாக்களான மௌலவி ஏ எல் இமாம் பாலாஹி, மௌலவி எம் எம் கமர்தீன், மௌலவி ஏ எம் ஹிதாயதுல்லாஹ், மௌலவி ஐ இம்றான் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வானது சுகாதார நடைமுறைகளை பேணி இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment