ஓட்டமாவடி பிரதேச பள்ளிவாசல்களுக்கு பூட்டு!


எச்.எம்.எம்.பர்ஸான்-

ட்டமாவடி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த குறித்த பிரதேசத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்களையும் இன்று (5) முதல் தற்காலிகமாக மூடி வைக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று (5) மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் போது கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டி முஸ்லிம் விவகார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் எமது பிராந்திய உத்தியோகாத்தர்களின் தீர்மானத்துக்கு அமைய பள்ளிவாசல்களை மறு அறிவித்தல் வரை மூடி வைக்குமாறு பள்ளிவால்கள் நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :