ஓட்டமாவடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; இருவர் படுகாயம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலை சந்தியில் இன்று (25) இடம்பெற்ற விபத்தில் இருவர் படு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பிரதான வீதியிலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், எம்.பி.சீ.எஸ்.வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் சிக்கிய இருவரும் படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :