கண்டி மாநகரத்தில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பம்



ண்டி மாநகரத்தில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மீண்டும் ஆரம்பம்.
கண்டி மாநகர எல்லைப்பகுதிக்குள் மூடப்பட்டிருந்த 48 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.
இன்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். 3 பாடசாலைகளை தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இதுதொர்பாக வலய கல்வி பணிப்பாளர்களினால் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தற்போதைய கொவிட் - 19 தொற்றின் காரணமாக கண்டியில் மாநகர எல்லைப்பகுதிக்ககுள் உள்ள பாடசாலைகள் டிசம்பர் மாதம் 04 திகதி தற்காலிகமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர்; அவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :