அட்டன் கொழும்பு வீதி வட்டவளை பகுதியில் தாழிறங்கியது - சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை


நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
ட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று 23/12/2020 மாலை பெய்த கடும் மழையினால் வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கருகிலே குறித்த வீதி பகுதியளவில் தாழிறங்கியுள்ளது

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் சிறிய அளவிலான சரிவு ஏற்பட்டிருந்த நிலையிலே நேற்று மாலை பெய்த கடும் மழையில் பாரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது

தற்போது குறித்த பகுதி ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதால் சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் தாழிறங்கியுள்ள குறித்த வீதிப்பகுதி விரைவில் புனரைமைக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :