கல்முனைப்பிராந்தியத்தில் 537ஆக எகிறிய கொரோனா தொற்று! அக்கரைப்பற்று: 300 கல்முனை: 69 அட்டாளைச்சேனை59


சகாதேவராஜா-

கிழக்கு மாகாணத்திலுள்ள நான்கு சுகாதாரபிராந்தியங்களுள், கல்முனைப்பிராந்தியத்தில் தினம் தினம் கொரோனாத் தொற்று அதிகரித்துவருகிறது.

13சுகாதாரப்பிரிவுகளைக்கொண்ட கல்முனைப்பிராந்தியத்தின் தொற்றுக்களின் எண்ணிக்கை 537ஆக எகிறியுள்ளது.

கல்முனைப்பிராந்தியத்துள் வருகின்ற அக்கரைப்பற்றுக் கொத்தணியில் 493பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீதி பிராந்தியத்தின் ஏனைய சுகாதாரப்பிரிவுகளில் இனங்காணப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் பணிமனை நேற்று(17) காலை 10மணி வரையான தரவுகளை வெளியிட்டுள்ளது.

பிரதேசங்களின் நிலைமை

பிராந்தியத்தில் தனியொரு பிரிவு அதிகூடிய தொற்றுக்களைக்கொண்டது என்றால் அது 300தொற்றுக்களைக் கொண்ட அக்கரைப்பற்று எனலாம்.
இரண்டாவதாக அருகிலுள்ள அட்டாளைச்சேனையில் 59தொற்றுக்கள்.

அடுத்ததாக கல்முனை மாநகரஎல்லைக்குள் 69 தொற்றுக்கள் அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கில் 42பேரும் ,சாய்ந்தமருதில் 18பேரும், கல்முனை வடக்கில் 9பேரும், தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனால் நேற்றுகாலை முதல் கல்முனையின் சிலபகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.


கல்முனை பிரதான சந்தையும் மூடப்பட்டுள்ளதுடன் அங்குள்ள உணவகங்கள் இரவு 8 மணியுடன் மூடப்படவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


பொத்துவிலிலிலும் திடீர் அதிகரிப்பு காட்டியுள்ளது. அங்கு தொற்றுக்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. உல்லைப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பில் 19பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.இறக்காமத்தில் 17பேரும்,திருக்கோவிலில் 13பேரும் ,சம்மாந்துறையில் 13பேரும், காரைதீவில் 8பேரும் ,நிந்தவூரில் 5பேரும் ,நாவிதன்வெளியில் 3பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்னும் பெறப்பட்ட பிசிஆர் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைக்கப்பெறவில்லை. அவை வந்தால் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்ரப் ஆதாரவைத்தியசாலையிலிருந்து இதுவரை வைத்தியசாலை ஊழியர்கள் 7பேருக்கும் ,நோயாளிகள் 4பேருக்குமாக மொத்தம் 11பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.


பிராந்தியத்திலுள்ள பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 85பேரும் புதிதாக உருவாக்கப்பட்ட மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 98பேரும், சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
பிராந்தியத்திலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களான ஒலுவிலில் 28பேரும், அட்டாளைச்சேனையில் ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நுரைச்சோலை நிலையம் தயாராகிவருகிறது.

இதுவரை கல்முனைப்பிராந்தியத்தில் ஒரேயொரு கொரோனா இறப்பு சம்மாந்துறையில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை இப்பிராந்தியத்தில் 12951பேருக்கு கொரோனாவுக்குரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதன.பிசிஆர் சோதனை 7652பேருக்கும், அன்ரிஜன் சோதனை 5299பேருக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :