மூதூரில் வீடமைப்பு திட்டத்துக்கான அடிக்கல் நடும் வைபவம்


ஹஸ்பர் ஏ ஹலீம்-

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் திட்டத்தின் கீழ் மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்குரிய வீடமைத்தலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(12) சம்பூர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.

மூதூர் பிரதேச செயலாளர் எம். பி. எம். முபாரக் வீட்டிற்கான அடிக்கல்லினை இதன்போது நட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், தொழிநுட்ப உத்தியோகத்தர், சம்பூர் கிழக்கு கிராம உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :