J.f.காமிலா-
கண்டி போகம்பர சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டம் செய்த கைதிகள் தங்களது போராட்டத்தை இன்று மாலை கைவிட்டுள்ளனர்.
போகம்பர சிறைச்சாலையில் 30க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியானதை அடுத்து தங்களை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் அல்லாவிட்டால வேறு சிறைகளுக்கு மாற்றும்படியும் கோரி நூற்றுக்கணக்கான கைதிகள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உடனடியாக சுகாதார அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு இன்று பகல் அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
பின் 250 வரையான கைதிகள் கேகாலை மற்றும் நீர்கொழும்பு சிறைகளுக்கும் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment