மட்டக்களப்பு - மாவடிவேம்பு நீரோடையில் விழுந்த விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார்.



ஏறாவூர் நிருபர் -
வரது சடலம் 24.11.2020 காலை மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூரைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 73 வயதுடைய கேஎம். இஸ்மாயில் என்பவரே பலியானவரென கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
தனது வயல் வாடியிக்கான மின்விநியோக வயர் அறுந்து நீரோடையில் விழுந்ததையடுத்து அந்த வயர்களை மீட்டுதிரும்பும்போது நீரில் அடித்துச் செல்லபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகள் சடலத்தைத் தேடியபோதிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னர் மறுநாள் 24.11.2020 செவ்வாய்க்கிழமை காலை கரையொதுங்கிய சலடத்தை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மீட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

திடீர்மரண விசாரணையதிகாரி எம்ஸ்எம். நஸிர் சம்பவ இடத்திற்குச் சென்று மரணவிசாரணைகளை ஆரம்பித்தார்.
கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏறாவூர் ஐ. முபாறக்கின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :