கரையோரம் 65 M இற்கு உட்பட்ட பகுதியில் நிர்மாணங்கள் சட்ட விரோதம்- பிரதேச செயலாளர்

சர்ஜுன் லாபீர்-

ல்முனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 65 மீற்றர் கரையோரப் பாதுகாப்பு வலயப்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் பொதுமக்களுக்கு கல்முனை பிரதேச செயலாளரினால் முக்கியமான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் 65M கரையோர பாதுகாப்பு எல்லைக்குள் காணப்படும் காணிகள் அனைத்தும் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வளங்கள் திணைக்களத்திற்குரியதாகும் . இக்காணியில் பிரதேச செயலாளரினது அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளும் மற்றும் கல்முனை பிரதேச செயலாளரினால் ஏற்கெனவே வழங்கப்பட்டு இற்றை வரைக்கும் புதுப்பிக்கபடாமலிருக்கும் முடிக்குரிய காணியை ஆட்சி செய்யும் அனைத்து அனுமதிப்பத்திரங்களும் செல்லுபடியற்றதாகும் .

இவ் அனுமதிப்பத்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சட்டவிரோத செயற்பாடாகும் . அத்துடன் இதுவரை 65 மீற்றர் கரையோரப் பாதுகாப்பு எல்லைக்குள் அத்துமீறி வாடி அமைத்தல் , கட்டிட நிர்மாணப் பணிகளில் ஈடுபடுதல் மற்றும் வாங்கல் விற்றல் போன்றவையும் சட்ட விரோத செயற்பாடுகளாகும் .

மேற்படி சட்டவிரோத செயற்பாடுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் கைவிடுமாறும் , இதுவரை தங்களால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைகளை காணியிலிருந்து அகற்றுமாறு சம்பந்தப்பட்டோரை கேட்டுக் கொள்கின்றேன் . இவ்வாறான சட்டவிரோத அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன் . என கல்முனை பிரதேச செயலாளர் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :