ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்
இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியிலேயே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த காலப்பகுதியில் 31 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்கமைய, ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த மாதம் 04 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இரண்டாயிரத்து 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் 308 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment