காரைதீவு இராணுவமுகாமருகேயுள்ள வெள்ளைப்பாலத்தின் ஊடான நீரோட்டத்திற்கு நீண்டகாலமாகத் தடையாயிருந்த மரம்செடிகொடிகள் கனரகவாகன உதவியால் வெட்டிசாய்க்கப்பட்டு துப்பரவாக்கப்பட்டன.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் விடுத்த வேண்டுகோளையேற்று அவர் நேரடியாக களத்திற்கு தனது பணியாளர்களுடன் விரைந்து இப்பணியை மேற்கொண்டார்.
இந்ததடையால் கடந்தகாலங்களில் வெள்ளநீர் ஊருக்குள் தேங்கிநிற்கும் துர்ப்பாக்கியநிலையேற்பட்டிருந்தது.
இப்பாரிய பணியை நேற்றுமுன்தினம் மேற்கொண்டதன்பலனாக தற்போதை மழையால் ஏற்பட்ட வெள்ளம் இலகுவாக வழிந்தோடுகிறது என பொதுமக்கள் நன்றியும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment