ஹஸ்பர் ஏ ஹலீம்-
அடிப்படைக் கொள்கைவாதிகளை திருப்திப்படுத்தவே முன்னால் அமைச்சர் றிசாதை கைது செய்யும் முயற்சியாகவும் அரசியல் நிகழ்ச்சி நிரலாகவும் உள்ளது என றிசாதின் கைது முயற்சி தொடர்பில் ஊடக சந்திப்பொன்று இன்று (18)கிண்ணியாவில் இடம் பெற்றது.இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதி கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகர சபை உறுப்பினருமான எம்.எம்.மஹ்தி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்
தற்போதைய ஆட்சியில் உள்ளவர்களில் ஆணைக்குழு,பொலிஸ் திணைக்களம்,புலனாய்வு துறை போன்றவற்றூக்கு பூரண விசாரனைக்கான ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளார் குற்றமற்றவர் என்று நிரூபித்தும் கூட மீண்டும் கைது முயற்சி இடம் பெறுவது அரசியல் அஜந்தாவாக உள்ளது இதனை ஏற்றுக் கொள்ள முடியாது தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சரான சமல் ராஜபக்ச போன்ற பிரபலங்கள் முன்னால் அமைச்சர் றிசாதை பாராட்டியும் உள்ளன.
இது ஒரு பழிவாங்கும் முயற்சியே அவரது குடும்பத்தையும் சேர்த்து பழிவாங்கும் முயற்சியே ஆகும் இவ்வாறான.நாடகங்களை அரசு அரங்கேற்றாமல் நீதியானதும் நியாயமானதூமான போக்கை கடைப்பிடித்து செயற்படவேண்டும் என நாட்டு முஸ்லிம் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
0 comments :
Post a Comment