மனைப் பொருளாதார அலகுகளை பலப்படுத்தும் வேலைத்திட்டம்


சர்ஜுன் லாபீர்-

ர்வதேச வறுமை ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களை சுயலாபத்துடன் கூடிய வருமானம் பெறுவர்களாக ஆக்கும் பொருட்டு சமூர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களை இணங்கண்டு மதிப்பீடு செய்யும் கள ஆய்வு வேலைத்திட்டம் கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்முனைக்குடி-01 கிராம பிரிவில் இன்று(21) கல்முனை பிரதேச செயலக சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர் சாலீஹ் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம்.எம் நஸீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் சமூர்த்தி திட்ட முகாமையாளர் எ.எம் எஸ் நயீமா,சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ரிபாயா,சமூர்த்தி கல்முனைக்குடி வங்கி முகாமையாளர் எம்.புவிராஜ்,மருதமுனை, நற்பிட்டிமுனை முகாமையாளர் எம்.எம் முபீன்,உதவி முகாமையாளர்களான எஸ்,எல் அஸீஸ்,எம் ரி தெளபீக்,எம்.எம்.எம் மன்சூர்,சமூர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என் எம்.நெளஸாத் உட்பட கிராம சேவர்கர்கள,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு கல்முனைக்குடி-01 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.இராசமலரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :