எப்.முபாரக் -
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது ராக்கட் தோட்டாக்கள் மீட்டுள்ளதாக தம்பலாகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தம்பலாகாமம் ஜயபுர காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று(21) ஒன்பது தோட்டாக்கள் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒன்பது மில்லிமீற்றர் அளவுடையதாக ஒன்பது தோட்டாக்களும் காணப்படுவதாகவும், அதிக சக்தியுடைய தோட்டாக்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்தோட்டாக்களை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் கையளிக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment