களனி வளையத்திற்கு உட்பட்ட ஜா – எல மற்றும் கந்தான பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கம்பஹா மாவட்டத்தின் 14 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிப்பிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வேயாங்கொட, மினுவாங்கொட, வீரங்குல, வெலிவேறிய, பல்லேவேல மற்றும் யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நீர்கொழும்பு வளையத்திற்கு உட்ப்பட்ட திவுலுப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஊரடங்கு சட்டவிதிகளுக்கு அமைவாக அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
#ஊரடங்கு #ஊரடங்கு சட்டம் #Curfew #ඇඳිරි නීතිය @ඇඳිරි නීතිය @ஊரடங்கு @Curfew
0 comments :
Post a Comment