நாவிதன்வெளி பகுதிக்கு வரும் சகல வாகனங்களும் தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்ட பின்னர் பயணிக்க அனுமதி



பாறுக் ஷிஹான்-
கொரோனா அனர்த்தம் மீள பரவ ஆரம்பித்துள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக நாவிதன்வெளி பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று(12) முற்பகல் முதல் அம்பாரை மாவட்டம் கல்முனை பிரதேசத்திலிருந்து நாவிதன்வெளி பகுதிக்கு வரும் சகல வாகனங்களும் சவளக்கடை தபால் அலுவலக சந்தியில் வைத்து தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டதன் பின்னரே நாவிதன்வெளி நோக்கி பயணிக்க இன்று அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அலுவலக பிரிவுகளில் தொற்று நீக்கும் மருந்து தெளிக்கப்பட்டது.

இச்செயற்பாட்டினை நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் அமரதாஸ ஆனந்த மற்றும் உப தவிசாளர் ஏ.கே அப்துல் சமட் தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் மு.இ.மு.ஜகான் உறுப்பினர்களான ஏ.பி சுபைதீன் தி. யோகநாயகன் உள்ளடங்கிய குழுவினர் பார்வையிட்டனர்.
மேலும் இச்செயற்பாடானது இராணுவத்தின் உதவியுடன் கல்முனை பிரதேசத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் சவளக்கடை தபால் அலுவலக சந்தியில் நிறுத்தப்பட்டு முற்றாக நுண்ணுயிர் தொற்று நீக்கும் மருந்து தெளித்து சுத்தப்படுத்திய பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :