குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பன்னல எலபடகம பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் மகன் ஒருவர், மினுவொங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலேயே, குறித்த பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, குருநாகல் போதனா வைத்தியசாலையில், கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் 20 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாகவும், அவர்களில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வைத்தியர் சந்தன கெந்தன்கமுவ குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment