இலங்கையில் சமூகத்தினிடையே கொரோனா தொற்று பரவ ஆரம்பித்து விட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் இணைச் செயலாளரான மருத்துவத் ஹரித்த அலுத்கே இதனைத் தெரிவித்தார்.
21 மாவட்டங்களில் தற்சமயம் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், இதுதவிர தனித்தனி சிறிய கொத்தனி கொரோனா பரவலும் தொடங்கியிருப்பதாகவும் கூறினார்.
மினுவங்கொடையில் தொடங்கிய கொரோனா பரவலின் மூலாதாரம் இதுவரை கண்டுபிடிக்கப்படாதமை பாரிய பிரச்சினை என்றும், தற்சமயம் சமூகத்தில் பரவத்தொடங்கியிருப்பது நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பாகும் என்றும் அவர் எச்சரித்தார்.
0 comments :
Post a Comment