நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்றுக் கிருமியை எதிர்கொள்ளும் Safoof Josand (Anti Viral Choorana) யூனானி மருந்துப் பொதிகள் வழங்கி வைக்கும் நடவடிக்கையை கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும் நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபிலினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான Safoof Josand (Anti Viral Choorana) நோயெதிர்ப்பு பானத்தை நேற்றைய தினம் (22) பிரதேச செயலாளர் எஸ்.எல்.ஹனிபாவிடம் கையளித்து வைத்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சாரின் பணிப்புரைக்கமைவாக சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி ஆர்.ஸ்ரீதரின் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணனின் நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று முகம்மதியாபுரம் மருந்து உற்பத்திப் பிரிவில் Safoof Josand (Anti Viral Choorana) யூனானி மருந்துப் பொதிகள் விஷேடமாக தயாரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment