தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மாகாணம் முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மலையகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதி ஒருவரது மகனுக்கு, கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியில் இன்று திருமணம் நடந்துள்ளது.
குறிப்பாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தில் திருமண நிகழ்வுகள், சமய நிகழ்வுகள், மக்கள் அதிகமாக ஒன்றுதிரளும் நிகழ்வுகள் மற்றும் மத வழிபாடுகளுக்குக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த ஹோட்டலில் இன்று நடந்த திருமண நிகழ்வு குறித்து, பல்வேறு விமர்சனங்கள் சமூக. ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
0 comments :
Post a Comment