கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல்



க.கிஷாந்தன்-
கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது கொவிட்-19 வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சினால் வெளியிட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்கள் அடங்கிய சுற்றறிக்கையைக் கடுமையாகப் பின்பற்றுமாறு ஆளுநர் அவர்களினால் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அத்துடன் கெப்படிபொல மற்றும் பண்டாரவளை பொருளாதார மையத்தில் முன்னெடுக்கப்படும் வியாபார நடவடிக்கைகள் சுகாதார முறைமைகளைப் பேணி, பாதுகாப்பான பிரதேசமாகத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக, குறித்த மையத்திற்கு சமூகமளிக்கும் அனைத்து வியாபாரிகளின் வாகனங்களும் தொற்று நீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்குரிய பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார அதிகாரிகளினால் பரிந்துரைக்கப்படுவது கட்டாயமாகும் என உத்தரவிடப்பட்டது. மேலும் குறித்த சட்டதிட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷன டெனிபிடிய, பண்டாரவளை மேயர், ஊவா மாகாண பிரதான செயலாளர், ஆளுநரின் செயலாளர், பதுளை மற்றும் மொனராகளை மாவட்டச் செயலாளர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர், சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :