அட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அட்டன் அட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் சடையன் பாலச்சந்திரன் இன்று தெரிவித்தார்.
பேலியகொடை மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்த அட்டன் நகர மீன் விற்பனையார்களை கடந்த 23 ஆம் திகதி பி.சி ஆர் பரிசோதனை மேற்கொண்டதையடுத்து அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது இந் நிலையில், அட்டன் மார்கட் பகுதி மூடப்பட்டதுடன் குறித்த நபரருடன் தொடர்புடைய 23 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டது.
அதில் குறித்த நபரின் குடும்பத்தின் நால்வர் உற்பட மேலும் ஆறுபேர் அடங்களாக 10 பேருக்கு கொரோனை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அட்டன் நகரை முழுமையாக மூடி கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சடையன் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment