ஓட்டமாவடி முகைதீன் பெரிய ஜும்மா பள்ளிவாயலில் மாபெரும் சிரமதானம்.

எச்.எம்.எம்.பர்ஸான்-


கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி முகைதீன் பெரிய ஜும்மா பள்ளிவாயல் மையவாடி இன்று சனிக்கிழமை (26) மாபெரும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.

கல்குடா ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவை அமைப்பு ஏற்பாடு செய்த இச் சிரமதானப் பணியில் பிரதேசத்தில் உள்ள உயர் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள் இளைஞர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த பள்ளிவாயல் மையவாடி சுத்தம் செய்யப்பட்டு உழவு இயந்திரங்கள் மூலம் குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

குறித்த சிரமதானப் பணயில் பங்குகொண்ட அனைவருக்கும் கல்குடா ஜனாஸா நலன் மற்றும் சமூக சேவை அமைப்பினர் நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :