ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இளைஞன் கல்முனை பொலிஸாரால் கைது

பாறுக் ஷிஹான்-


ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இளைஞனை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அருகே நேற்று(25) மாலை சந்தேகத்திற்கிடமாக நபர் ஒருவர் நடமாடுவதாக புலனாய்வு தகவல் ஒன்றினை அடுத்து கல்முனை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் வழிந்டத்தலில் அங்கு சென்ற கல்முனை மோட்டார் வாகன பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நிஹால் சார்ஜன்ட் நவாஸ் மற்றும் மஜீட் ஆகியோர் சந்தேக நபரான இளைஞனை சோதனை செய்தனர்.

இதன் போது இளைஞனின் சேட் பையில் இருந்து 1 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை மீட்டு கைது செய்தனர்.

குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று பகுதியில் இருந்து ஹெரோயினை விநியோகம் செய்ய வருகை தந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

கைதானவர் 29 வயதுடையவர் என்பதுடன் சந்தேக நபரை தடுத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :