சொக்கா மல்லிக்கு அதிர்ஷ்டம்; நீதிமன்றம் வழங்கியது உத்தரவு!



J.f.காமிலா பேகம்-
ரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள தேவையான வசதியை செய்துகொடுக்கும்படி சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்வை அறிவித்தது.
நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு தமக்கு அனுமதி வழங்குமாறு கோரி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகரவின் நாடாளுமன்ற அனுமதி விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானத்தை வெளியிட்டது.
சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு தமக்கு எந்தவித தடையும் இல்லை என்பதற்கான அனுமதியை வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தமது மனுவில் கோரியிருந்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :