கிழக்கின் கல்விமான் க.ஞானரெத்தினம் அவர்களுக்கு மகுடம் சூட்டல் விழா..

ஏ. எல் நவாஸ்-

லங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் கல்வி மான் க.ஞானரெத்தினம் அவர்களின் சேவையினைப் பாராட்டி தனது மாணவர்களால் "ஆசானுக்கு மகுடம்" எனும் விழாவினை நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

"வாழும் போதே வாழ்த்துவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இவ் விழாவில் சிரேஸ்ட விரிவுரையாளர் கல்விமான் க.ஞானரெத்தினம் அவர்களுக்கான மகுடம் சூடப்படவுள்ளது

இவ் விழாவானது

விழாக்குழுத் தலைவர் திரு.M.பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு அஞ்ஞனா வைபவ மாளிகை அருட்சகோதரர். கலாநிதி.S.A.I.மத்தியூ அரங்கில் எதிர்வரும் 19.09.2020 ஆம் திகதி காலை 9.45 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர். பேராசிரியர். எஸ்.ஏ. அரியதுரை அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதோடுகௌரவ விருந்தினர்களாக திரு.M.K.M.மன்சூர், சிரேஸ்ட உதவிச் செயலாளர், மாகாணக் கல்வி அமைச்சு, கிழக்கு மாகாணம்.

Dr.C.அருள்மொழி, தலைவர், கல்வி, பிள்ளை நலத்துறை, கலை கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக் கழகம்.

திரு.M.I.M நவாஸ், பீடாதிபதி, கல்வியல் கல்லூரி, மட்டக்களப்பு. திரு.மு.புண்ணியமூர்த்தி, பீடாதிபதி, கல்வியல் கல்லூரி, அட்டாளைச்சேனை. Dr.S.M. ஜுனைதீன், பீடாதிபதி, பொறியியல் பீடம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம். Prof.S. பிரதீபன், பீடாதிபதி, விஞ்ஞான பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம். Prof.S.திருக்கணேஸ், கணிதப் பேராசிரியர், கிழக்குப் பல்கலைக்கழகம். ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந் நிகழ்வில் விசேடமாக பேராசிரியர்.S.A.அரியதுரை, பேராசிரியர். S.சந்திரசேகரம், பேராசிரியர். M.கருணாநிதி, பேராசிரியர் .P. C. பக்கீர் ஜபார், பேராசிரியர். K. சின்னத்தம்பி, பேராசிரியர். T.தனராஜ், பேராசிரியர். M.செல்வராசா, திரு.T.ராஜேந்திரன், கலாநிதி.T.கலாமணி ஆகியோருக்கும் மகுடம் சூட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :