மறைத்து வைக்கப்பட்டிருந்த புராதன சிலை கைது...

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் பகுதிலுள்ள வீடொன்றில் புராதன காலத்து சிலையொன்றை தன்வசம் மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்த குறித்த சிலையையும் கைப்பற்றியுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.சி.சந்தனகுமார தெரிவித்தார்.

கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தரவின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.ஜ.சம்பத் தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களான எஸ்.வீரசிங்க, எஸ்.அசோக், எஸ்.சேனாதீர, எஸ்.கோபிநாத், எஸ்.பியங்கர ஆகியோர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் புராதன காலத்து சிலையொன் மீட்கப்பட்டுள்ளது.

கல்குடா பிரதேசத்தில் அண்மையில் ஆலயம் ஒன்றில் சிலையொன்று இனம் தெரியாத நபர்களினால் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட போது இவ்வாறானதொரு அரிய வகை புராதான சிலையொன்றை கண்டு பிடித்துள்ளதாகவும், இது தொப்பிகல பிரதேசத்தில் சட்ட விரோத புதையல் அகழ்வு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் இருந்து தெரிய வந்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் புராதான காலத்து சிலைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.சி.சந்தனகுமார மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :