கல்குடா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தரவின் வழிகாட்டலில் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.ஜ.சம்பத் தலைமையில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களான எஸ்.வீரசிங்க, எஸ்.அசோக், எஸ்.சேனாதீர, எஸ்.கோபிநாத், எஸ்.பியங்கர ஆகியோர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் புராதன காலத்து சிலையொன் மீட்கப்பட்டுள்ளது.
கல்குடா பிரதேசத்தில் அண்மையில் ஆலயம் ஒன்றில் சிலையொன்று இனம் தெரியாத நபர்களினால் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட போது இவ்வாறானதொரு அரிய வகை புராதான சிலையொன்றை கண்டு பிடித்துள்ளதாகவும், இது தொப்பிகல பிரதேசத்தில் சட்ட விரோத புதையல் அகழ்வு மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளின் இருந்து தெரிய வந்துள்ளதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் புராதான காலத்து சிலைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.சி.சந்தனகுமார மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment