திருகோணமலையில் கரையோர தூய்மைபடுத்தல் செயற்பாடுகள் முன்னெடுப்பு

எப்.முபாரக்-


ம்மாதம் 19 ம்திகதி தொடக்கம் 25 ம் திகதி வரை கரையோர தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல் வளங்கள் பாதுகாப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் கிழக்கு மாகாண மற்றும் திருகோணமலை மாவட்ட பிரதான வைபவம் இன்று (23) திருகோணமலை உப்புவெளி கரையோரத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தூய்மைப்படுத்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். மிகவும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக கரையோரம் சார் பிரதேசம் காணப்படுவதாகவும் இதன் அழகு கெடாமல் பாதுகாப்பது அனைவரது பொறுப்பாக அமைவதாக இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

உப்புவெளி கரையோரம் உட்பட 7 கிலோமீற்றர் நீளமான கரையோரம் இதன்போது தூய்மைப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் திணைக்கள தலைவர்கள் , சக உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் வட கிழக்கு மாகாண உதவி முகாமையாளர் தி.சிறீபதி தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலகம் என்பன இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :