வடிகாண் மூடி சேதமடைந்துள்ளமையால் மாணவர்களின் போக்குவரத்து பாதிப்பு..

எஸ்.எம்.எம்.முர்ஷித் - 

வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட வாழைச்சேனை ஹைராத் வித்தியாலய வீதியில் காணப்படும் வடிகாண் மூடி சேதமடைந்துள்ளமை காரணமாக போக்குவரத்து நீண்டகாலமாக தடைப்பட்டு காணப்படுகின்றது.

வாழைச்சேனை ஹைராத் வித்தியாலய வீதியின் ஊடாக பாடசாலை மாணவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் மற்றும் வீதியில் உள்ள மக்கள் தங்களது போக்குவரத்தினை பாரிய சிரமத்திற்கு மத்தியில் பயன்படுத்தி வருகின்றனர்.

வீதியில் காணப்படும் வடிகாண் மூடி சேதமடைந்துள்ளமை காரணமாக வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்திற்கு வரும் மாணவர்கள் வடிகாணை பயந்த நிலையில் கடந்து வருவதையும், வடிகாணை கடக்கும் போது அதனுள் விழக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் பாடசாலை சமூகத்தினர் தெரிவித்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் வாழைச்சேனை பிரதேச சபைக்கு முறைப்பாடு சமர்பிக்கப்பட்டதாகவும், இது தொடர்பில் இதுவரை எந்தவித கரிசனையும் மேற்கொள்ளவில்லை எனவும் வீதியிலுள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே வாழைச்சேனை ஹைராத் வித்தியாலய மாணவர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி வாழைச்சேனை பிரதேச சபை உரிய வடிகாண் மூடியினை புனரமைத்து தருமாறு பாடசாலை சமூகம் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :