கொரோனாதொற்று காரணமாக கடந்த சில மாதகாலங்களாக மூடப்பட்டிருந்த ஏறாவூர் வாவிக்கரையோர செய்னுல் ஆப்தீன் ஆலிம் பூங்காவின் பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு நகரசபையின் கௌரவ தவிசாளர் I.வாஸித் தலைமையில் நேற்று 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30PM மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ZA.நஸீர்அகமட் கலந்து கொண்டதோடு அதிதிகளாக நகரசபையின் கௌரவ உறுப்பினர் SM.றியாழ் மற்றும் சபையின் செயலாளர் சியாவுல்ஹக் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிபடத்தக்கது.
நிகழ்வினை தொடர்ந்து தற்கால அரசியல் சூழ்நிலையும் முஸ்லிம்களின் பங்களிப்பும் பற்றிய விசேட சிறப்புரை ஒன்றை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றியதோடு
எதிர் வரும் காலங்களில் வாவிக்கரையோர பூங்காக்கள் அழகுபடுத்தல் திட்டத்தில் மேலும் மேம்படுத்தப்படும் என்பதை தனது உரையில் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment