ஜே.எப்.காமிலா பேகம்-
மிகவும் பிரபல்யமான சீன செயலியான டிக் டாக் செயலியை இன்னும் 24 மணிநேரத்தில் தடைசெய்யவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த உத்தரவை அறிவிப்பதற்கான நிறைவேற்று அதிகார அவசர சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பீஜிங்கினால் அமெரிக்காவின் ஐ.பி முகவரிகள் திருடப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் அமெரிக்கா மேற்படி இந்த முடிவினை அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவும் சீன செயலிகள் பலவற்றை அண்மையில் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment