திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன் (நிரந்தரமாக) நேற்று மீண்டும் கடமையினை பொறுப்பேற்றார்.
நேற்று கல்விப்பணிமனைக்குச் சென்ற அவருக்கு சக உத்தியோகத்தர்கள் ஊழியர்களால் அங்கு ஆரத்திஎடுத்து மாலைசூட்டி பெருவரவேற்பளிக்கப்பட்டது.
8 தமிழ் வலயங்களுக்கான கல்விப்பணிப்பாளரை தேர்ந்தெடுக்கும் நேர்முகத்தேர்வானது கடந்த 2020.07.10 கிழக்குமாகாண கல்வியமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது திருக்கோவில் வலயக்கல்வி பணிமனைக்கு கல்விப்பணிப்பாளராக திரு.யோ.ஜெயச்சந்திரன் (இ.க.நி.சேவை II) தெரிவுசெய்யப்பட்டு நேற்று தனது கடமையினை பொறுப்பேற்றார்.
2018.12.21 முதல் 2020.08.16 வரை தற்காலிகமாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment