திருக்கோவில் வலயகல்விப்பணிப்பாளராக ஜெயசந்திரன் கடமையேற்பு!

காரைதீவு சகா-

திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளராக யோ.ஜெயச்சந்திரன் (நிரந்தரமாக) நேற்று மீண்டும் கடமையினை பொறுப்பேற்றார்.

நேற்று கல்விப்பணிமனைக்குச் சென்ற அவருக்கு சக உத்தியோகத்தர்கள் ஊழியர்களால் அங்கு ஆரத்திஎடுத்து மாலைசூட்டி பெருவரவேற்பளிக்கப்பட்டது.
8 தமிழ் வலயங்களுக்கான கல்விப்பணிப்பாளரை தேர்ந்தெடுக்கும் நேர்முகத்தேர்வானது கடந்த 2020.07.10 கிழக்குமாகாண கல்வியமைச்சில் இடம்பெற்றது.

இதன் போது திருக்கோவில் வலயக்கல்வி பணிமனைக்கு கல்விப்பணிப்பாளராக திரு.யோ.ஜெயச்சந்திரன் (இ.க.நி.சேவை II) தெரிவுசெய்யப்பட்டு நேற்று தனது கடமையினை பொறுப்பேற்றார்.
2018.12.21 முதல் 2020.08.16 வரை தற்காலிகமாக திருக்கோவில் வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :