இலங்கையில் முக்கிய தலைவர்களுடன் அமெரிக்கா பேச்சு..

ஜே.எப்.காமிலா பேகம்-

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றதாக அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது உத்தியோக பூர்வ டுவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், புதிய பிரதமராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு, தான் வாழ்த்துக்களை நேரடியாக தெரிவித்ததாகவும் அவர் இந்த பதிவில் குறிப்பட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு தொடர்ச்சியாக பெற்றுக்கொடுக்கப்பட்ட ஆதரவை, அமெரிக்கா தொடர்ந்தும் வழங்குமென அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் இதன்போது பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும், இலங்கையின் வலுவான இறையான்மை குறித்தும் இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் தொடர்பிலும் இருதரப்பிடையே கலந்துரையாடப்பட்டுள்ளது.


இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன மற்றும் அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சராக தினேஸ் குணவர்தன மீண்டும் நியமிக்கப்படுள்ளமை குறித்து அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :