பின்தங்கிய கண்ணகிகிராம தமிழ்வித்தியாலயத்திற்கு சுகாதாரஉபகரணங்கள்!


காரைதீவு நிருபர் சகா-
தி
ருக்கோவில் வலயத்துக்குட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டத்திலுள்ள மிகவும் பின்தங்கிய கண்ணகிகராம தமிழ்மகாவித்தியாலயத்திற்கு அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியத்தினர் ஒரு தொகுதி சுகாதார மற்றும் கற்றல் உபகரணத்தொகுதியை நேற்று வழங்கிவைத்தது.

பிரித்தானியா அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியம் பின்தங்கிய 40 பாடசாலைகளுக்கு ஒரு தொகுதி சுகாதார மற்றும் கற்றல் உபகரணத்தொகுதிகளை வழங்கிவருவது தெரிந்ததே.

நீண்ட கொரோனா விடுமுறைக்குப்பின் திறபடும் பின்தங்கிய பாடசாலைகளுக்கு சுகாதார பாதுகாப்பு மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் செயற்றிட்டத்தின் இரண்டாவது நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கண்ணகி கிராம தமிழ் மகாவித்தியாலயத்தில் அதிபர் கே.இராஜநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசசெயலாளர் ஆர்.திரவியராஜ் திருக்கோவில் வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் சோ.சுரநுதன் நிதியத்தின் பிரதிநிதியும் வலயக்கல்விப்பணிமனை பிரதிநிதியுமாகிய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

நிதியத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

முகக்கவசங்கள் கையுறைகள் டிஜிடல் உடல்வெப்பமானி கிருமிநாசினி தெளிக்கும்கருவி மேந்தலை எறியி புறொஜெக்டர் வெண்தாள்கள் உள்ளிட்ட தொகுதி பாடசாலைக்கு அன்பளிப்புச்செய்யப்பட்டது.

கலந்துகொண்ட ஆசிரியர் பெற்றோர்களுக்கு பாடசாலையில் கடைப்பிடிக்கப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் வீட்டுநடைமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -